by Staff Writer 28-07-2018 | 10:24 AM
இந்தியா மற்றும் எசெக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் மற்றும் இந்திய அணிகள் விளையாடின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி 395 ஓட்டங்களையும் எசெக்ஸ் அணி 8 விக்கட்களை இழந்து 359 ஒட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து, இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 89 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து பயிற்சி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.