யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டுத் தாக்குதல்

யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டுத் தாக்குதல்

by Staff Writer 25-07-2018 | 4:56 PM
Colombo (News 1st)  யாழ். சாவகச்சேரியில் இரு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரி - சங்கத்தானை, மீனாட்சி அம்மன்கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்றிரவு 11 மணியளவில் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் 55 வயதுடைய ஒருவரை வெட்டிக்காயப்படுத்தியுள்ளனர். தலையில் படுகாயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவளை, சாவகச்சேரி - மீசாலை மேற்கில் அமைந்துள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் புகுந்த வாள்வெட்டுக்குழுவினர் பெண்ணொருவரின் நகையை அபகரித்ததுடன், 53 வயதுடைய ஒருவரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்