பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 29 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 29 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 25-07-2018 | 5:45 PM
பாகிஸ்தானில் குவெதா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பாகிஸ்தானின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (25) நடைபெற்றது. அந்நாட்டின் கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில், தேர்தல் மூலம் தொடர்ந்து 2ஆவது தடவையாக ஆட்சி மாற்றம் நடைபெறவிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தேர்தலில், இராணுவத்தின் தலையீடு, பயங்கரவாத ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் போட்டியிடுவது போன்ற குறைகள் கூறப்பட்டாலும் திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பலூசிஸ்தான் - குவெதா நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் பொலிஸார், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சுகின்றனர். தேர்தல் நடைபெறும் சமயத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.