கதிர்காமத்தை நோக்கிப் பயணிக்கும் ஆடிவேல் பவனி

கதிர்காமத்தை நோக்கிப் பயணிக்கும் சக்தியின் ஆடிவேல் பவனி

by Staff Writer 25-07-2018 | 7:40 AM
Colombo (News 1st) முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலைத் தாங்கிய, சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கதிர்காமத்தை சென்றடையவுள்ளது. நேற்று முன்தினம் (23), வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன வளாகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஆடிவேல் பவனி, நேற்று (24) அதிகாலை ஹம்பாந்தோட்டை ஶ்ரீ கதிரசேன் ஆலயத்தை அடைந்தது. இதன்பின்னர், வீரவில, திஸ்ஸமகாராம ஊடாக ஆடிவேல் பவனி நேற்றிரவு செல்லக் கதிர்காமத்தை அடைந்தது. இதனையடுத்து, இன்று செல்லக்கதிர்காமத்தில் இடம்பெறும் விசேட பூஜைகளைத் தொடர்ந்து வேல்பவனி கதிர்காமத்தை சென்றடையவுள்ளது.