by Staff Writer 24-07-2018 | 4:40 PM
Colombo (News 1st) திடீர் விபத்திற்குள்ளாகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெறுவதற்காக கிராமிய வைத்தியசாலையொன்றில் அனுமதி பெறச்சென்ற மூவரை அனுமதிக்காமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவை பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கூறியுள்ளார்.
தம்மென்னாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் குறித்த வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையினால், காயமடைந்தவர்கள் மிகிந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்த தாய் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.