புத்தளம் - முந்தல் விபத்தில் ஒருவர் பலி

புத்தளம் - முந்தல் விபத்தில் ஒருவர் பலி

by Staff Writer 24-07-2018 | 12:30 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல் கீரியங்கள்ளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் வவுனியாவிற்கு பயணித்த சிறிய ரக லொறியும் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. லொறியொன்றுடன், பின்னால் சென்ற மற்றுமொரு லொறி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் லொறியின் சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.