பஸ் தரிப்பிடங்களிலுள்ள குறைபாடுகளை ஆராய திட்டம்

பஸ் தரிப்பிடங்களிலுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்குத் திட்டம்

by Staff Writer 24-07-2018 | 9:25 AM
Colombo (News 1st) பஸ் தரிப்பிடங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட ஆய்வொன்றை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்விலிருந்து புதிய பஸ் தரிப்பிடங்களின் தேவை மற்றும் பயன்பாட்டிலிருக்கும் தரிப்பிடங்களின் குறைபாடுகள் தொடர்பிலும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறான குறைபாடுகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது, பல பிரதேசங்களில் பஸ் தரிப்பிடங்கள் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.