ஒரு கோடிக்கும் அதிக பணத்துடன் இருவர் கைது

ஒரு கோடிக்கும் அதிக பணத்துடன் இலங்கையர் இருவர் கைது

by Staff Writer 24-07-2018 | 7:27 AM
Colombo (News 1st) ஒரு கோடியே 77,13,793 ரூபா பணத்துடன் இலங்கை பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து அமெரிக்க டொலர், ஹொங்கொங் டொலர், இந்திய ரூபா மற்றும் இலங்கை நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள், குறித்த பணத்தை சட்டவிரோதமாக சீனாவுக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட வேளையிலேயே, சுங்கப்பிரிவால் கைது செய்யப்பட்டதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிடிய தெரிவித்துள்ளார். 43 மற்றும் 32 வயதுடைய, அக்குரணை மற்றும் பாமன்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விபுல மினுவன்பிடிய மேலும் குறிப்பிட்டுள்ளா​ர். இதேவேளை, 1,53 இலட்சம் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுடன் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூருக்குப் பயணிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இன்று (24) அதிகாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர் பிரஜையொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக விபுல மினுவன்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.