மஹாநாம, பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான மஹாநாம, பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 24-07-2018 | 11:49 AM
Colombo (News 1st) இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி, கலாநிதி ஐ.கே. மஹாநாம மற்றும் அரசமரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரஜையொருவரிடமிருந்தே இவர்கள் கையூட்டு பெறுவதற்கு முயற்சித்துள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (24) கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதவான், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவை நீடித்துள்ளார். சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கான தகுந்த காரணங்கள் இல்லை என நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார்.