by Staff Writer 24-07-2018 | 10:25 PM
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (24) பிற்பகல் விடுத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.