by Staff Writer 24-07-2018 | 5:02 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை, துர்காபுரம் பகுதியில் அடையாளந்தெரியாதோர் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த சம்பவத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
துர்காபுரம் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் நுழைந்த அடையாளந்தெரியாத 6 பேரால் இரும்புச்சங்கிலியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இருவர் காயமடைந்துள்ளதுடன், வீட்டின் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.