களு கங்கை நீர்த்தேக்கத்திற்கு நீர்நிரப்பும் வைபவம்

களு கங்கை நீர்த் தேக்கத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஆரம்பம்

by Staff Writer 23-07-2018 | 10:33 AM
Colombo (News 1st) களு கங்கை நீர்த் தேக்கத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. அதேநேரம், மொரகஹகந்த - களு கங்கை சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மொரகஹகந்த நீர்த்தேக்கமானது, குலசிங்க நீர்த்தேக்கம் எனவும் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளது. மொரகஹகந்த நீர்த்தேகத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஜனாதிபதியினால் இன்று (23) தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.