by Staff Writer 17-07-2018 | 12:02 PM
Colombo (News 1st) பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
இதனால், இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர், மாணவர்களை விடுதிகளிலிருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொறியியல் பீட மாணவர்கள் அமைதியின்மையுடன் செயற்பட்டதாலேயே, பொறியியல் பீடத்தை காலவரையறையின்றி மூடுவதற்குத் தீர்மானித்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேராசிரியர் உபுல் திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.