18 மில்லியன் தங்கத்துடன் இலங்கையர் இருவர் கைது

18 மில்லியன் பெறுமதியுடைய தங்கத்துடன் இலங்கையர் இருவர் கைது

by Staff Writer 16-07-2018 | 4:13 PM
Colombo (News 1st) நாட்டிற்கு சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டுவந்த இலங்கைப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 18 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கம் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 29 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை 2 கிலோகிராம் 900 கிராம் நிறையுடையவை எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.