அமெரிக்கா செல்வதற்கு பெசிலுக்கு நீதிமன்றம் அனுமதி

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு பெசில் ராஜபக்ஸவிற்கு நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 16-07-2018 | 1:43 PM
Colombo (News 1st) முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, மருத்துவ சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்பிரகாரம் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதிக்கு இடையில், அமெரிக்கா செல்வதற்கு பெசில் ராஜபக்ஸவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களத்தின் நிதியைப் பயன்படுத்தி ஜீ.ஐ.குழாய்களைப் பெற்று அவற்றை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.