அங்குருவாதொட்ட - தொடம்கொடவில் கொலை

அங்குருவாதொட்ட - தொடம்கொடவில் பிரதேசசபை அதிகாரி கொலை

by Staff Writer 16-07-2018 | 12:46 PM
Colombo (News 1st) அங்குருவாதொட்ட - தொடம்கொட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அதிகாரியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வேரவத்த பகுதியிலுள்ள தங்குமிடமொன்றில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 39 வயதுடைய நபரே கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் சடலம் ஹொரணை தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்குருவாதொட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.