English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jul, 2018 | 7:03 pm
இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுநர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகிய மூவருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கு மேலதிகமாக 4 சர்வதேச ஒருநாள் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள தினேஷ் சந்திமால், சர்வதேச ஒருநாள் தொடரிலும் பங்கேற்க முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளார்.
அண்மையில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு விஜயம் செய்த இலங்கை அணி 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் 2 மணித்தியாலங்கள் தடைப்பட காரணமாக இருந்தது.
இதற்காக அணித்தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுநர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், டெஸ்டைத் தவிர 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தடையையும் குறித்த மூவருக்கும் விதித்ததாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் தினேஷ் சந்திமால் இழந்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 Jul, 2022 | 06:18 PM
06 Mar, 2021 | 07:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS