களுபோவில பகுதியில் ஹெரோயினுடன் இன்றும் ஒருவர் கைது

களுபோவில பகுதியில் ஹெரோயினுடன் இன்றும் ஒருவர் கைது

by Staff Writer 15-07-2018 | 5:40 PM

ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த ஒருவர் களுபோவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

100 கிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கமைய, முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்குட்படுத்தியபோது ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவராவார். சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.