அதிவேக நெடுஞ்சாலை விபத்துகள் அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலை விபத்துகள் அதிகரிப்பு

by Staff Writer 15-07-2018 | 8:24 AM
Colombo (News 1st) அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பாவனைக்கு உகந்த டயர்கள் பயன்படுத்தப்படாமையே விபத்துகளுக்கான காரணம் என அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சுமார் 20 விபத்துகள் மாதந்தோறும் பதிவாகுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.