வாகன விபத்து - ஒருவர் பலி!

வாகன விபத்து - ஒருவர் பலி!

by Staff Writer 14-07-2018 | 8:54 AM

பதுளை - ரஜ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 70 வயதான முதியவர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். [08:32, 7/14/2018] Fazlullah Mubarak: துப்பாக்கிச் சூடு - இருவர் பலி ! மொனராகலை குடா ஓயா. கொவிந்துபுர பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். குடாஓயா, ஊவ குடாஓயா பகுதியில் நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 52 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவருக்கு இடையில் காணப்பட்ட தகராறின் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியின் மூலமே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பி்டடனர். இதேவேளை மொனராகலை கொவிந்துபுர பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளனர். சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.