வத்தளையின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

வத்தளையின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

by Staff Writer 14-07-2018 | 5:44 PM
Colombo (News 1st)  திருத்தப் பணிகள் காரணமாக வத்தளையின் சில பகுதிகளில் நாளை (15) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பேலியகொட, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா - எல மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.