மொனராகலை துப்பாக்கிச்சூடு - இருவர் பலி

மொனராகலை துப்பாக்கிச்சூடு - இருவர் பலி

by Staff Writer 14-07-2018 | 8:32 AM

மொனராகலை குடா ஓயா கெவிந்துபுர பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

குடாஓயா - ஊவ குடாஓயா பகுதியில் நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 52 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவருக்கு இடையில் காணப்பட்ட தகராறின் காரணமாகவே இந்தத் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியின் மூலமே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, மொனராகலை - கெவிந்துபுர பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளனர். சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.