புதையல் தோண்ட முயற்சித்தவர் கைது!

புதையல் தோண்ட முயற்சித்தவர் கைது!

by Staff Writer 14-07-2018 | 8:52 AM

கிளிநொச்சி கட்டக்காடு பகுதியல் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியகுளம் - கட்டகாடு பகுதியை சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்ப்டடுள்ளன. சந்தேகநபர் இன்று கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, பொகவந்தலாவ கெம்பயின் தோட்டத்தில் அனுமதிபத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெம்பியன் ​தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்களும் இன்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.