சம்பூர் கடற்பரப்பில்  21 ஹெரோயின் பொதிகள் மீட்பு 

சம்பூர் கடற்பரப்பில் 66 மில்லியன் ரூபா பெறுமதியான 21 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

by Staff Writer 13-07-2018 | 4:56 PM
Colombo (News 1st)  திருகோணமலை - சம்பூர் கடற்பரப்பில் 66 மில்லியன் ரூபா பெறுமதியான 21 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 கிலோ 550 கிராம் நிறையுடைய போதைப்பொருளே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். எனினும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சம்பூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.