விசேட நுளம்பு ஒழிப்பு  வே​லைத்திட்டம்

விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Staff Writer 12-07-2018 | 5:49 AM
Colombo (News 1st) இன்றும் நாளையும் விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளமை மற்றும் அவ்வப்போது ஏற்படும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்தியநிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 8 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 54 வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.