பலத்த காற்று வீசும்: கடல் அலை உயரும் சாத்தியம்

பலத்த காற்று வீசும்: கடல் அலை உயர்வடையும் சாத்தியம் நிலவுகிறது

by Bella Dalima 12-07-2018 | 7:03 PM
Colombo (News 1st)  நாட்டிலும் நாட்டைச்சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் தொடர்ந்தும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், தென், மத்திய, வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளை (13) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை கொழும்பு, காலியூடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2 அல்லது 3 மீட்டர் வரை உயர்வடையும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கடற்கரையோரங்களை அண்டி வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.