யாழில் ஆயுதங்களுடன் நால்வர் கைது

யாழில் ஆயுதங்களுடன் நால்வர் கைது

by Staff Writer 11-07-2018 | 4:36 PM
Colombo (News 1st)  யாழ். நவாலி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர். வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது நேற்றிரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு தாக்குதல்களை இலக்காகக் கொண்டு தொடர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுற்றிவளைப்புகளுக்காக வட பிராந்தியத்திலுள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்குமான விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.