ரெஜினா கொலை: சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

சிறுமி ரெஜினா கொலை: பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

by Staff Writer 11-07-2018 | 4:20 PM
Colombo (News 1st)  யாழ். சுழிபுரத்தில் சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயிரழந்த சிறுமி ரெஜினா சார்பாக சட்டத்தரணி சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்தார். கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லையென தெரிவித்த சட்டத்தரணி, அவர்களை கைது செய்ய வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இதற்கமைய, பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்