இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

மேல் மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

by Staff Writer 10-07-2018 | 7:14 PM
Coombo (News 1st)  தமிழ் பாடசாலைகள் மற்றும் தமிழ் சமூகத்தின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பான மேல் மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளராக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் புதிய மாகாண சபைக் கட்டடத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சமூக அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.