எரிபொருள் தொடர்பிலான விசேட பத்திரம் அமைச்சரவையில்

எரிபொருள் தொடர்பிலான விசேட பத்திரம் இன்று அமைச்சரவையில்

by Staff Writer 10-07-2018 | 7:51 AM
Colombo (News 1st) பெற்றோல் மற்றும் டீசலின் விலை தொடர்பிலான விசேட பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருளின் விலையை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று அமைச்சரவையில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனங்கள், பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தன. எனினும், மறுநாள் பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் வகையில் பழைய விலையில் எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.