by Staff Writer 09-07-2018 | 3:38 PM
தம்புள்ளை - குருணாகல் பிரதான வீதியில் பல்லியெத்த பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 50 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய - யாழ்ப்பாணம் மற்று , வவுனியா - எம்பிலிப்பிட்டியவுக்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இரண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படுவதாக கொகரெல்ல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.