மாகாணசபைத் தேர்தல் ஜனவரி வரை ஒத்திவைப்பு

மாகாணசபைத் தேர்தலை ஜனவரி வரை ஒத்திவைப்பதற்கு சாத்தியம்

by Staff Writer 09-07-2018 | 6:33 AM
Colombo (News 1st) மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பதற்கான சாத்தியமுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுவதாலும் பரீட்சைகள் நடைபெறும் காலம் என்பதாலும் டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.