தொண்டமான் - பேச்சு மக்களுக்கு பச்சைக்கொடி-வ.சுரேஷ்

தொண்டமான் சந்திப்பு மக்களுக்கு பச்சைக்கொடி- வடிவேல் சுரேஷ்

by Staff Writer 09-07-2018 | 10:14 PM

தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் பதுளை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பனர் வடிவேல் சுரேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். "ஒரே மேசையில ஒன்றாக அமர்ந்து, ஆறுமுகன் தொண்டமான் அவர்களும், ராமநாதன் அவர்களும் நானும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நேர்மையான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. இது மலையக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்