தரம் 1க்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம்

தரம் 1க்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளையுடன் நிறைவு

by Staff Writer 09-07-2018 | 1:30 PM
Colombo (News 1st) அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளையுடன் நிறைவடையவுள்ளது. பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. நேர்முகப் பரீட்சையின் மூலம் 32 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். படைவீரர்களின் பிள்ளைகள் ஐவர் என்ற ரீதியில் மொத்தமாக 37 மாணவர்கள் ஒரு வகுப்பிற்குத் தெரிவுசெய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.