" சிரச " மட்டுமே என்னுடன் இருந்தது - ஜனாதிபதி !

" சிரச " மட்டுமே என்னுடன் இருந்தது - ஜனாதிபதி !

by Staff Writer 09-07-2018 | 9:46 PM

பொலன்னறுவை வெலிகந்த நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கமநல சேவை மத்திய நிலையம் இன்று ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தன்னுடன் சிரச ஊடகம் மட்டுமே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்று மாலையில் தொலைக்காட்சியைப் பார்த்தால், அனைத்தும் பிரச்சினைகளாக இருக்கின்றன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ," களுகங்கைக்கு நீர் சேர்க்கும் திட்டத்தை நாம் இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம். நான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியபோது எனது பக்கத்தில் சிரச ஊடக நிறுவனம் மட்டுமே இருந்தது. வேறு எவரும் ஜனாதிபதித் தேர்தலின்போது இருக்கவில்லை. எனினும், ஏனைய தொலைக்காட்சிகளில் காண்பித்த நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எதனையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஊடகங்கள் சிலவேளை எடுக்கும் தீர்மானங்களைப் புத்தியுள்ள மக்கள் நிராகரிப்பர்" எனவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். பயிற்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் விவசாய உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.