கொலைக்குற்றவாளிகள் இருவருக்கு மரணதண்டனை!

கொலைக்குற்றவாளிகள் இருவருக்கு காலி மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை

by Staff Writer 09-07-2018 | 3:44 PM

கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளங் காணப்பட்ட இருவருக்கு காலி மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கே நீதிபதி மஞ்சுல திலகரட்னவினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு அக்மீமன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. போதிய ஆதாரங்கள் இன்மையால் 7 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.