கிரிபத்கொடவில் நபரொருவர் கொலை

கிரிபத்கொடவில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

by Staff Writer 09-07-2018 | 11:44 AM
Colombo (News 1st) கிரிபத்கொட - நாஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி முச்சக்கரவண்டி சாரதியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் நாஹேனவத்த, ஹூனுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 3 மணியளவில் குறித்த நபர், அவரது வீட்டில் வைத்து இருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சடலம், கொல்லப்பட்டவரின் முச்சக்கரவண்டியிலே கொண்டுசெல்லப்பட்டு அருகிலுள்ள வீதியொன்றில் போடப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.