மீசாலையில் வீடொன்றில் கொள்ளை

மீசாலையில் வீடொன்றில் வாள்களுடன் கொள்ளை

by Staff Writer 08-07-2018 | 9:32 PM
யாழ் மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் நுழைந்த சிலர் தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான தேடுதல் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று நள்ளிரவு வாள்களுடன் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். இவர்கள் , வீட்டு உரிமையாளர்களை வாள்முனையில் அச்சுறுத்தி, தங்காபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 24 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

ஏனைய செய்திகள்