பிரதமர் ரணில் சிங்கப்பூருக்கு விஜயம்

பிரதமர் ரணில் சிங்கப்பூருக்கு விஜயம்

by Staff Writer 08-07-2018 | 10:07 PM
பிரதமர் ரணில் விக்கரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட தூதுக்குழு இன்று காலை சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார். அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ரவூப் ஹக்கீம், உள்ளிட்டோர் இந்த குழுவில் அடங்குகின்றனர். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6 ஆவது சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாடு மற்றும் அதனுடன் இணைந்ததாக நடைபெறவுள்ள சிங்கப்பூர் சர்வதேச வார நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீசின் லுங் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரதமர், பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நகரங்கள் தொடர்பான மாநாட்டின் ஆரம்ப கூட்டத் தொடரில் நகர அபிவிருத்தி சுற்றாடலை பாதுகாத்தல் என்ற தொனிப்பொருளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் உரை நிகழ்த்தவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறான நகரத்தை உருவாக்குதல் என்பதே இந்த மாட்டின் தொனிப்பொருளாகும்.