வேலனை வேணியன் 80 இல் காலமானார்

நவோதயா மக்கள் முன்னணியின் அரசியல் குழுத்தலைவர் வேலனை வேணியன் காலமானார்

by Staff Writer 08-07-2018 | 11:09 AM
Colombo (News 1st) நவோதயா மக்கள் முன்னணியின் அரசியற் குழு தலைவரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான வேலனை வேணியன் தனது 80ஆவது வயதில் இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்னார் காலமானார். மூன்று தடவைகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டுள்ள வேலணை வேணியன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராவார். ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவராகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை உப தலைவராகவும் வேலணை வேணியன் பதவி வகித்திருந்தார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பட்டியல் அசனம் வழங்குவதாக தெரிவித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமை தம்மை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் அவர் நவோதயா மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டார். கலாபூஷண விருது பெற்ற கவிஞராகவும் எழுத்தாளராகவும் பிரகாசித்த அன்னார், எண் சோதிடத்துறையிலும் பெயர் பெற்றவராவராவார். நாளை காலை எட்டு மணிமுதல் அன்னாரின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளதாக நவோதயா மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்