மாணவர்களை மீட்கும் பணியில் வெளிநாட்டு சுழியோடிகள்

குகைக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் வெளிநாட்டு சுழியோடிகள்

by Chandrasekaram Chandravadani 08-07-2018 | 10:41 AM
தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வௌிநாடுகளைச் சேர்ந்த 13 சுழியோடிகளும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஐவரும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உள்நாட்டு நேரப்படி, காலை 10 மணியளவில் குகைக்குள் நுழைந்துள்ளதாக மீட்பு நடவடிக்கையைத் தலைமை தாங்கும் நரோன்ங்சாக் ஒசோட்டானகோர்ன் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். குகையின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் சுழியோடிகள், மருத்துவக் குழு மற்றும் பாதுகாப்புப் படையினர் மட்டும் செல்லும் வகையில், ஏனையோர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் 12 பேர் மற்றும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் கடந்த 23ஆம் திகதி குறித்த குகைக்குள சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் பல விதங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.