எக்கல்ஓயாவில் 05 பேரை காணவில்லை...03 பேர் மரணம்

எக்கல்ஓயாவில் 05 பேரை காணவில்லை...03 பேர் மரணம்

by Staff Writer 08-07-2018 | 9:50 AM
Colombo (News 1st) அம்பாறை, தமன - எக் கல் ஓயாவில் வள்ளம் கவிழ்ந்ததில் ஐவர் காணாமற்போனதுடன், அவர்களில் மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பதுளை சிறி சீவலி வித்தியாலய மாணவர்களும் பெற்றோரும், அம்பாறைக்கு சுற்றுலா சென்ற சந்தர்ப்பத்தில் இன்று காலை 6.30அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேசவாசிகள் ஐவரின் ஒத்துழைப்புடன், வள்ளத்தில் ஒன்பது பேர் பயணித்துள்ளனர். காணாமற்போனோரைத் தேடும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டதுடன், இன்று மாலை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. பதுளை கதன சிறி சீவலி வித்தியாலத்தில் கல்வி பயின்ற 13 வயதுடைய சாருக விதர்ஷன, ஆசிரியரான எம்.கே சந்தி மற்றும் அதிபர் பீ.கே அமரசூரிய ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.