காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதம்

நாளையுடன் 500 நாட்கள்: காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்

by Staff Writer 07-07-2018 | 8:29 PM
Colombo (News 1st)  காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நல்லூர் ஆலய முன்றலில் வடக்கு, கிழக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நாளையுடன் 500 நாட்களை எட்டவுள்ள நிலையில், இன்று அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்