சிறுபோகத்தை புதிய முறையில் கொள்வனவு செய்யத் தயார்

சிறுபோக அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்யத் தயார்

by Staff Writer 07-07-2018 | 6:38 AM
Colombo (News 1st) விவசாயிகளின் சிறுபோக அறுவடையை புதியமுறையின் கீழ் கொள்வனவு செய்வதற்குத் தயாராகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இம்முறை 1,20,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வது நெல் சந்தைப்படுத்தல் சபையின் இலக்காகும். நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி மொஹொட்டி தெரிவித்துள்ளார்.