கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

by Staff Writer 06-07-2018 | 4:17 PM
Colombo (News 1st)  கொழும்பின் பல பகுதிகளில் நாளை (07) 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப் பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், கொழும்பு 5 மற்றும் கோட்டை மாநகர சபை பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், கொழும்பு 4, கொழும்பு 6, கொழும்பு 7 மற்றும் கொழும்பு 8 ஆகிய பகுதிகளிலும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.