பேர்பெச்சுவல் வியாபாரத்திற்கான தடை நீடிப்பு

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான தடை நீடிப்பு

by Staff Writer 05-07-2018 | 5:38 PM
Colombo (News 1st) பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டுத் திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுவரும் விசாரணைகளை தொடரும் வகையில் இன்று பிற்பகல் 4.30 இல் இருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் மற்றும் அதன் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்கும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேலும் 6  மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.