நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது
by Staff Writer 05-07-2018 | 1:57 PM
Colombo (News 1st) நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.