முறிகள்:  C350 ஆவணத்தை பகிரங்கப்படுத்த அனுமதி

முறிகள்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் C 350 ஆவணத்தை பகிரங்கப்படுத்த ஜனாதிபதியின் செயலாளர் அனுமதி

by Bella Dalima 04-07-2018 | 4:27 PM
Colombo (News 1st)  முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் C 350 ஆவணத்தை பகிரங்கப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுமதி வழங்கியதாக அரச சுவடிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆவணத்தில் 127 பக்கங்கள் உள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நதீரா ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆவணத்தை அச்சுப்பிரதிகளாக அல்லது இறுவட்டுகளாக பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் சுவடிகள் திணைக்களத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரச சுவடிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நதீரா ரூபசிங்க தெரிவித்துள்ளார்.