பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

by Staff Writer 03-07-2018 | 2:46 PM
(Just In) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, இன்றைய சபை நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஷ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சபையில் இன்று தொடர்ச்சியாக குரல் எழுப்பினர். இதன்போதே, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செங்கோலை எடுத்துச்செல்வதற்கு முயன்றதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். இதனையடுத்தே இன்றைய சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.