துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான கான்ஸ்ரபிள் பலி

தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான கான்ஸ்ரபிள் உயிரிழப்பு

by Staff Writer 03-07-2018 | 4:57 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான கான்ஸ்ரபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் கான்ஸ்ரபிள் உயிரிழந்துள்ளாரா அல்லது அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனையின் பின்னரே இந்த விடயத்தை உறுதி செய்துகொள்ள முடியும் என பொலிஸார் கூறினர். தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய 22 வயதான கான்ஸ்ரபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சேவையில் ஒரு வருட பயிற்சியை நிறைவு செய்த குறித்த கான்ஸ்ரபிள், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நியமனம் பெற்றுள்ளார். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்ரபிளின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.